Recent Posts

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை மீட்கவும், மேற்கொண்டு தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அவர்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிகையாளர் தலை துண்டித்து கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது

By Battinews → Thursday, August 21, 2014
இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது.

பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும் பெரிதானது. அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள் வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால் இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும், உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும் சிரமப்படவேண்டியுள்ளது.
தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால் தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன் கூறியுள்ளான். மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர். ஆனால் அவனை பரிசோதிக்கும் மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஒருவர், அவன் லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தரும் நோய் ஆகும். தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் கூறிய அவனது பெற்றோர்களான ஷமிம்-ஹலீமா தம்பதியர் அதுவரை தாங்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன் - VIDEO

By Battinews →
பேஸ்புக் கில் கலக்கும் நாட்டாமை வீடியோ

நாட்டாமை பேஸ்புக் - Nattamai - Facebook Version

By Battinews → Tuesday, July 1, 2014
பிரேசிலில் நடைபெற்று வரும் 20 ஆவது உலக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில்  சிறந்த 16 அணிகள் பங்கேற்கும்  இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இம்முறை உலகக்கிண்ண போட்டிகளை நடத்தும்  பிரேஸில் இன்று   நடைபெறும்  முதல் போட்டியில் சிலியை எதிர்த்தாடவுள்ளது.

சொந்த மண்ணில் உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் பிரேஸில் அணி இறுதி வரை வெற்றியை விட்டுக்கொடுக்காது விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

பெலோ ஹொரிஸொன்டே மினெய்ரோ மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி   இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உலகக்கிண்ண  கால்பந்தாட்ட வரலாற்றில் சிலிக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும்  பிரேசில் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்கதக்கது.

எனினும் இம்முறை உலக்கிண்ண போட்டிகளில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய  ஸ்பெயின் அணியை வெற்றிக் கொண்ட  சிலி அணி இன்றைய போட்டியில் கடும் சவாலை விடுக்கும் நம்பப்படுகின்றது.

காலிறுதிக்கு முன்னைய சுற்றான சுப்பர் 16 அணிகளின் சுற்றின்  இரண்டாவது  போட்டியில்  கொலம்பியாவும் உருகுவேயும் மோதவுள்ளன.

இந்தப் போட்டி ரியோடி ஜெனீரோ மரக்கானா மைதானத்தில் நாளை அதிகாலை 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

கொலம்பியாவும் உருகுவேயும் இதற்கு முன்னர் 38 தடவைகள் சந்தித்துள்ளதுடன் அவற்றில் 18 தடவைகள் கொலம்பியா வெற்றிப் பெற்றுள்ளதுடன் உருகுவே அணி 11 தடவைகள் வெற்றிப் பெற்றுள்ளது..

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் 9 தடவைகள் சமநிலையில்  முடிவடைந்துள்ளன.

எவ்வாறாயினும் சிறந்த கால்பந்தாட்ட அணிகள் என்ற பெயருக்கு பாத்திரமான ஸ்பெயின்  இங்கிலாந்து இத்தாலி போர்த்துக்கல் உள்ளிட்ட  பல ஐரோப்பிய அணிகளும், கானா, கெமரூன் ஆகிய ஆபிரிக்க அணிகளும் லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.

ஆசியாவிலிருந்து பங்கேகேற்ற  மூன்று அணிகளான ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளாளும்   அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை  என்பது குறிப்பிடத்கதக்கது

உலக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்; இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பம்

By Battinews → Saturday, June 28, 2014
மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதல் இன்று காலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அசிட் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவனெல்லையில் பொலிஸார் இருவர் மீது அசிட் தாக்குதல்

By Sayanolipavan → Thursday, June 19, 2014
சுவிட்ஸர்லாந்தின் ஆர்பெர்க் பகுதியில், வெப்ப பலூன் மூலம் 8,000 மீட்டர் உயரத்துக்குச் சென்ற ரெமோ லாங் (38), அங்கிருந்து இறக்கை ஆடை (விங்சூட்) அணிந்து குதித்தார். இதற்காக அவர் ஆக்சிஜன் உபகரணத்தை பயன்படுத்தவில்லை. அவர் பத்திரமாகத் தரையிறங்கினார். இதன்மூலம் ஆக்சிஜன் உபகரணத்தின் உதவியின்றி அதிக உயரத்திலி ருந்து குதித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ரெமோ லாங்கின் இச் சாதனைக்கு உதவி புரிந்தவர்கள் கூறுகையில், ‘‘குதிப்பதற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் ரெமோ லாங் இடைவிடாது ஆக்சிஜனை செறிவாகச் சுவாசித்தார்” எனத் தெரிவித்தனர்.


8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

By Battinews → Tuesday, June 10, 2014
விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன

விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Tags:

விமான ரகசியங்கள்!

By Battinews →
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த குழந்தையின் பெயர் மேடி டிப்பெட். இவளுடைய பெற்றோர் மிக் மற்றும் கெரின் டிப்பெட். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் அவளுடைய தந்தை மிக், 'உனக்கு அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா?' என்று கேட்கிறார். கேள்வியை முடிக்கும் முன்பே மேடி 'அம்மாதான்' என்று பதிலளிக்க... 'நான் உனக்கு பொம்மை வாங்கித் தருகிறேன். திரும்ப சொல்லு.. அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? ' என்று கேட்கிறார். இவ்வாறு தன்னைத்தான் பிடிக்கும் என்று குழந்தையை சொல்ல வைப்பதற்காக தந்தை மிக் கையாளும் வித்தைகளும், அதை குழந்தை எப்படி கையாள்கிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
இந்தக் குழந்தையின் மழலை பேச்சும், எக்ஸ்பிரஷன்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. தந்தையின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல், இறுதியில் 'அப்பாதான் பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு, 'சும்மாதான் சொன்னேன். அம்மாதான் எப்பவும் பிடிக்கும்' என்ற ரீதியில் இவள் ஜாலியாகப் பேசுவது கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைத்து விடும். மேடி டிப்பெட்டுக்கு ஒரு வயது நிரம்பும்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ, அவளுடைய தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஃபோட்டோ எடுக்கும்போது நடந்த எதேச்சையான உரையாடல். 2012 ஆம் ஆண்டில் வைரலாக இருந்த இந்த வீடியோவைப் பார்த்து இதுவரை சுமார் 1.12 கோடி பேர் அகமகிழ்ந்திருந்திருக்கின்றனர்.

இன்னமும் யூடியூப் மூலமாக கோடிக்கணக்கான பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கும் இந்த புத்திசாலிக் குழந்தையான மேடி டிப்பேட் இன்று நம்முடன் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஆம்,   கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காலம் சென்று விட்டாள் மூன்று வயதே ஆகும் மேடி.


17 ஆம் தேதி மேடிக்கு ஜலதோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன. வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவர், சாதாரண ஜலதோஷம்தான், கவலைப்படத்தேவையில்லை என்று சொல்லிவிட, மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டனர். ஆனால், நேரம்போக போக ஜலதோஷம் தீவிரமாகவே, இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு மேடியை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சோதனை செய்தபோது இரண்டுவித ஜலதோஷ வைரஸ்கள் மேடியை பாதித்திருந்ததையும், அதில் ஒன்று குழந்தையின் இதயத்தைத் தாக்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி, ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழ்நிலை. சற்றுநேரத்தில் அவளுடைய தந்தையின் மடியிலேயே அகால மரணம் அடைந்தாள்.



விஷயம் கேள்விபட்ட பின்னர் உலகில் இதுவரை மேடியை வீடியோவில் மட்டுமே பார்த்த எத்தனையோ பேர், அவளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியபடி இருக்கின்றனர் இன்றும்! 

டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்கு மேடியின் தாயார் கெரின் டிப்பெட் அளித்த பேட்டியில், 'மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கக்கூடியவள். ஆனால், அவள் கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனால், இன்னும் 10 வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் பலர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடி வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்' என கண்ணீருடன் கூறியிருக்கிறார். மேடிக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பூங்காவில் நடந்த நினைவு தினத்தில்கூட பெற்றோர் விருப்பத்தின்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத்தான் கடந்திருக்கிறது.
Tags:

கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை!

By Battinews → Tuesday, May 20, 2014
டுபாயில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலரை  ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியதில்  15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பயணித்தவர்’கள் அனைவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

எனினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குித்த தகல்கள் இதுவரையிலும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags:

டுபாயில் வெளிநாட்டு ஊழியர்கள் ஏற்றிச் சென்ற பஸ் விபத்து ! 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Battinews → Sunday, May 11, 2014
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள மைதானத்தில் பிரமாண்டமான பந்தலும் மணமேடையும் அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான உறவினர்கள் கூடியிருந்தனர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் களை கட்டி இருந்தது.
Tags:

காதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை

By Battinews → Saturday, May 10, 2014
யாழ். அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டினுள் இருந்த ஐவர் மீது தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை

By Battinews → Sunday, May 4, 2014
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிருடன் புதைந்தனர். மண்ணில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், மீட்பு பணிகள் நேற்று மாலையே நிறுத்தப்பட்டுவிட்டது.ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷன் மாகாணத்தில் உள்ளது ஆப் பரீக் கிராமம். மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கனோர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மலையில் விரிசல் ஏற்பட்டு பயங்கரமான சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையே பாதியாக பிளந்து, கீழே இருந்த வீடுகளை சில நொடிகளில் மண்ணும், பாறைகளும் மூடின. வீடுகளில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் மண்ணில் உயிருடன் புதைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிருடன் புதைந்தனர்.

By Battinews →
குறுந்தகவல் அனுப்பப் பயன்படும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், இந்தச் செயலி பிரபலமடைந்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.

"உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

மார்ச் மாதம் வரை வாட்ஸ் ஆப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. இதில் 32 கோடி பயனர்கள் தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயல்பாடு சிறப்பாக, சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பலர், உயிர்களைக் காப்பாற்ற வாட்ஸ் ஆப் மூலம் இ.சி.ஜி. மற்றும் இருதய நோயாளியின் புகைபடங்களை அனுப்புகின்றனர். இதனால் தாமதமின்றி சிகிச்சை அளிக்க முடிகிறது" இவ்வாறு அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009-ஆம் ஆண்டு உக்ரைனைச் சேர்ந்த ஜான் கூம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரியான் ஆக்டன் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் நிறுவனத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப் (WhatsApp )

By Battinews →
சிலி நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று (புதன் கிழமை) 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

By Battinews → Friday, April 4, 2014

காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது.

முன் சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்: 49 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

By Battinews → Monday, March 31, 2014
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் போல்மர் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்குப் பொருத்தமானவரை தெரிவு செய்யும் பொருட்டு சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழு தெரிவு செய்திருந்தவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலாவும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

அவரையே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள  பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக இந்தியர்!

By Battinews → Wednesday, February 5, 2014
வானியல் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருந்து 22 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் முன் எப்போதும் பார்த்திராத விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜன் ஆறு கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:

விண்வெளியில் ஆறு போல் ஓடும் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு

By Battinews → Saturday, February 1, 2014
ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தினந்தோறும் குளிக்காவிட்டால் எதையோ பறிகொடுத்தது போன்று அனைவரும் உணர்வார்கள்.

உலகமே இவ்வாறு சுழன்று கொண்டிருக்க, ஈரானை சேர்ந்த 80 வயது முதியவர் அமோவ் ஹாஜி, கடந்த 60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை! 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை'

By Battinews → Sunday, January 12, 2014
அமெரிக்காவில் ஆன் லைன் மூலம் மனித மூளை உட்பட திசுக்களை விற்ற குற்றத்திற்காக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர்
அங்குள்ள இண்டியானா மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்தில் 2013 ஆம் ஆண்டு ஆறு முறை திருடிய இந்த நபர், மனித மூளை உட்பட பலவகையான திசுக்களை திருடியுள்ளார்.

அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் டேவிட் சார்லஸ் விற்றுள்ளார்.

இந்நிலையில், சார்லஸிடம் 6 மூளைகளை 670 டாலர்களுக்கு வாங்கிய நபர் ஒருவர் அவை அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்டது எனத் தெரிந்தவுடன் உடனடியாக இண்டியானா போலிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட் சார்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மனித மூளையை ஆன் லைனில் விற்ற இளைஞர் கைது

By Battinews → Sunday, January 5, 2014
துபையில் சின்னச் சின்னக் காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது.

திருமணமான ஒரே வாரத்தில் குவைத்தைச் சேர்ந்த ஒரு பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். என் கணவருக்கு உணவு நாகரிகம் தெரியவில்லை. முறையாக உணவருந்தத் தெரியவில்லை. அவர் உணவருந்துவதைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது.ஆகவே, விவாகரத்து வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மற்றொரு பெண் விசித்திரமான காரணத்துக்காக விவாகரத்து கோரியுள்ளார். என் கணவர் பற்பசை டியூப்பை கீழிருந்து பிதுக்காமல், நடுவில் பிதுக்குகிறார். எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. பிடிவாதம் பிடிக்கிறார். எனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கோரி, வழக்க றிஞரை அணுகியுள்ளார்.

இதற்கெல்லாமா விவாகரத்து ?

By Battinews → Thursday, January 2, 2014
இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருட்கள் வீடு தேடி விமானத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? இன்று இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால், நாளை இந்த மாயம் நடைமுறையில் சாத்தியமாகலாம்.

விமானத்தில் வீடு தேடி வரும் பார்சல்: அமேசான் திட்டம்

By Battinews → Friday, December 6, 2013
தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக தயாராகிவிட்டார் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவேளைக்குப் பின் நமது வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’. இதில் வைகைப்புயலுக்கு ஜோடியாக ‘பில்லா 2′ புகழ் மீனாக்ஷி திக்ஷித் நடிக்கிறார்.

‘போட்டா போட்டி’ புகழ் யுவராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

இதில் வடிவேலு இரண்டு வேடங்களில் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க தீயா வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார்.

https://twitter.com/Actor_Vadivelu


Tags:

ட்விட்டரில் வடிவேலு!

By Battinews → Wednesday, December 4, 2013
மாஸ்கோவிலிருந்து டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகர் கஸானுக்குப் சென்ற போயிங் 737 பயணியர் விமானம் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 44 பயணிகள், 6 சிப்பந்திகள் என 50 பேர் உயிரிழந்தனர். தற்போது 50 பேர்களின் உடல்கள்  கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் உயிரழந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி இன்று நடைபெறுகிறது. ரஷிய தரப்பில் உயிரிழந்தோர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் விமான விபத்து 50 பேர் பலி

By Battinews → Tuesday, November 19, 2013
GFGF
Tags:

GFG

By Battinews → Monday, October 7, 2013

இங்கிலாந்தில் உள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்தவர் மரீனா சேப்மேன் (63). இவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றனர்.
Tags:

காட்டில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்

By Battinews → Friday, April 5, 2013