மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதல் இன்று காலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அசிட் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.