இதற்கெல்லாமா விவாகரத்து ?

By Battinews → Thursday, January 2, 2014
துபையில் சின்னச் சின்னக் காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது.

திருமணமான ஒரே வாரத்தில் குவைத்தைச் சேர்ந்த ஒரு பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். என் கணவருக்கு உணவு நாகரிகம் தெரியவில்லை. முறையாக உணவருந்தத் தெரியவில்லை. அவர் உணவருந்துவதைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது.ஆகவே, விவாகரத்து வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மற்றொரு பெண் விசித்திரமான காரணத்துக்காக விவாகரத்து கோரியுள்ளார். என் கணவர் பற்பசை டியூப்பை கீழிருந்து பிதுக்காமல், நடுவில் பிதுக்குகிறார். எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. பிடிவாதம் பிடிக்கிறார். எனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கோரி, வழக்க றிஞரை அணுகியுள்ளார்.

Post Tags: