ரஷ்யாவில் விமான விபத்து 50 பேர் பலி

By Battinews → Tuesday, November 19, 2013
மாஸ்கோவிலிருந்து டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகர் கஸானுக்குப் சென்ற போயிங் 737 பயணியர் விமானம் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 44 பயணிகள், 6 சிப்பந்திகள் என 50 பேர் உயிரிழந்தனர். தற்போது 50 பேர்களின் உடல்கள்  கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் உயிரழந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி இன்று நடைபெறுகிறது. ரஷிய தரப்பில் உயிரிழந்தோர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.