ஐ.பி.எல்.,க்கான டைட்டில் உரிமையை Pepsi வாங்கியது

By Battinews → Wednesday, November 21, 2012
இந்தியாவில் ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் ப்ரிமீயர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 6வது ஐ.பி.எல்., போட்டி 2013ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல்., போட்டிக்கான டைட்டில் உரிமையை டி.எல்.எப்., நிறுவனம் பெற்று இருந்தது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான டைட்டில் உரிமைக்கான ஏலம் விடப்பட்டு அதற்கான டெண்டர் பெறப்பட்டு, அந்த டெண்டர் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. அதில் பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்சி அந்த உரிமையை வாங்கியுள்ளது. ரூ.396.8 கோடிக்கு இந்த உரிமையை பெப்சி வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்த காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இனி 2013ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெப்சி ஐ.பி.எல்., எனும் பெயரிலேயே போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

Post Tags: