இது வேற படம் 

இனந்தெரியாத சிலரால் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்ட சம்பம் களுத்துறை, மொரகஹகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மொரகஹகந்த விகாரையில் இருந்த பிக்கு ஒருவரை, இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்த இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.