மலேசியாவில், கார் ஓட்டி சென்ற ஆசிரியை, தவளையை பார்த்து பயந்து தடுமாறியதால், விபத்தில் பலியானார்.மலேசியாவில் ஆசிரியராக இருந்தவர் மோயி இன்,39. இவர் தன் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, காருக்குள் தவளை துள்ளி குதிப்பதை பார்த்து பீதியடைந்தார். இதனால், ஓடிக்கொண்டிருந்த கார், நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது வேகமாக மோதியது.இந்த விபத்தில், மோயி இன் பலியானார். எட்டு வயது மகனுக்கு கால் முறிந்தது. ஒன்பது வயது மகளுக்கு தலையில் அடிப்பட்டதால், சுயநினைவில்லாமல் இருக்கிறார்.