Browsing "Older Posts"

Browsing Category "hot"


இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம்!

By Admin Staff → Saturday, September 22, 2012

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள இயங்குதளங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டொலர் செலுத்திய பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், ஒக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.
முதல் முறையாக இரு வேறு வகை கணணி சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் இயங்குதளத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது.
டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டில் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும், யு.எஸ்.பி. 3 கிடைக்கும், விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்.
யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கணணி பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8

By Admin Staff →


நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.

Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?

ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். . recuva download

கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும்.

இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம்.

பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.





நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.

Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?

ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். . recuva download

கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும்.

இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம்.

பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.

Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக இழந்த கோப்புகளை மீட்பது எப்படி??

By Admin Staff → Monday, September 17, 2012


Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.
கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.

இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன.

சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்:

காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும்.

உங்கள் மடிக்கணனியில் Wi-Fi பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும், அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.

2. கணனி மற்றும் Router Re Boot:

Wi-Fi பட்டனை அழுத்திய பின்னரும், இணைய இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கணனி அல்லது இணைய இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், Router Re Boot செய்திடவும்.

இதனால் இந்த சாதனங்களின் வன்தட்டு பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது மென்பொருள் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும்.

அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்து விட்டு பின்னர் இணைக்கவும்.

இதனை power cycling வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில் இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

Wi-Fi வலைப்பின்னலில் பிரச்னையா?

By Admin Staff →

அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.
எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது.

வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ்(Save) செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஒன்லைன் ஸ்டோரேஜ், கோப்புகளை பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக கோப்புகளை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.

எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது.

அத்துடன் புதியதாக கணனிகளில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஒன்லைன் மூலமாக கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.

ஒன்லைன் டெம்ப்ளேட் ஒன்றை தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது.

இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.

வழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில்(quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் போர்மட் செய்திட முடிகிறது. இதிலேயே தகவல்களை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.

நெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.

இதில் தரப்படும் சார்ட்(Sort) தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில் ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.

இது போன்ற வசதிகள் மூலம் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால் எக்ஸெல் தொகுப்பிலும் ஒன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில் ஒர்க்ஷீட்கள் ஒன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.

எக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால் ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில் அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில் மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.

எனவே ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.

குறிப்பாக கோப்புகளை ஒன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத் தான் வேண்டும்.

எம்.எஸ்.ஆபீஸ் 2013-ன் சிறப்பம்சங்கள்

By Admin Staff → Saturday, September 15, 2012
வணக்கம் நண்பர்களே..! இப்போதெல்லாம் அனைவரிடம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ அழகான ஆன்ட்ராய்ட் மொபைல் (Android) இருக்கிறது. கையில் மொபைல் இல்லாத இளைஞர்களை இப்போது பாரப்பது அபூர்வம். இளைஞர்கள் மத்தியில் தற்போது இணையத்துடன் கூடிய மொபைல்களை (Mobile with Internet) பயன்படுத்துவது என்பது தற்கால நாகரீகமாகவே மாறிவிட்டது. இணைய இணைப்பு இல்லாத மொபைல்களை வைத்திருப்பவர்களை கண்டாலே ஏற இறங்கப் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு மொபைல்களில் இணையப்பயன்பாடு மற்றும் முக்கியத்தவம் அதிகரித்துவிட்டது.

இணைய வசதியுடன் கூடிய மொபைல்கள் குறிப்பாக விலையுயர்ந்த மொபைல்கள், அதிக வசதிகளடங்கிய மொபைல்கள் (More Feautres)என நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது. நம்மவர்கள் விடாமல் பழைய மாடலை மாற்றிவிட்டு, புதிய மாடல்களுக்கு(New Model Phone) மாறுகின்றனர்.

ஆனால் மொபைல் பாதுகாப்பில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்களா?என்றால் அதுதான் இல்லை. அதிக விலைப்போட்டு வாங்கிய மொபைல்களை (Costly Mobiles) வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பதற்குரிய சரியான மென்பொருள்களை இவர்கள் பாவிப்பதில்லை. கட்டணம் கொடுத்து ஆன்டி வைரஸ் மென்பொருள்களை வாங்க இயலாதவர்கள் கீழிருக்கும் அற்புதமான, பயன்மிக்க இலவச மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் மொபைல்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

மொபைல்களைப் பாதுகாக்க என்னென்ன மென்பொருள்கள் உள்ளன? எவை எவையெல்லாம் இலவசமாக கிடைக்கின்றன்? வாருங்கள் பார்ப்போம்..

உங்கள் மொபைல் போனைக் காப்பதற்கான Anti Virus ஒரு சில இருக்கின்றன. இலவசமாக கிடைப்பதில் சிறந்து விளங்குபவை கீழிருப்பவைகள்.




1. AVG Mobilation


AVG மொபைல் ஆன்டி வைரஸ்
இது உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச ஆன்டிவைரஸ் ஆகும். ஆண்ட்ராய்ட் மொலைப்களுக்காக சிறப்பு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இதுவாகும்.

AVG Mobilation for Android features

  1. Scans apps, Setting, Files, Media in real time
  2. Backup and restore valuable apps and data
  3. kill tasks that slow tablet down
  4. Find lost or stolen tablet via google maps
  5. Lock and wipe device remotely protect privacy
இம் மென்பொருளைத் தரவிறக்குவதற்கு : Download AVG Security

2. Lookout Mobile Security


lookout mobile security (mobile antivirus)
Lookout Mobile Anti-virus software
இந்த வைரஸ் மெனப்பொருள் மொபைல்களுக்கு பாதுகாப்பு (Mobile Security) வழங்குவதில் நன்றாக செயல்படுகிறது. இம்மென்பொருளில் Online Storage வசயுடன் இருப்பதால் உங்களுடைய அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்கலாம். மேலும் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும்(All Data)காப்பி செய்துகொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இமென்பொருளைத் தரவிறக்கம் கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும்.

தறவிறக்க இணைப்புச் சுட்டி: Download Mylook Out Mobile Anti Virus

3. NetQin Mobile Antivirus:

மொபைல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
இச்சிறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Anti Virus Software) துரிதமாக செயல்படுகிறது. மொபைல்களுக்கு வைரஸ்களிடமிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கி உங்கள் மொபைல்களுக்குத் தேவையான Anti virus Sotware தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தரவிறக்கச் சுட்டி: Download NetQit Mobile anti virus

குறிப்பு: ஒவ்வொரு தளத்திலும் தரவிறக்கம் செய்யும்போது, உங்களுடைய மொபைல் மாடல், மொபைல் நிறுவனத்தின் பெயர், மொழி (Mobile model, the mobile company's name, language) ஆகியவற்றை கொடுத்து டவுன்லோட் (தரவிறக்கம்)செய்துகொள்ளுங்கள்... நன்றி நண்பர்களே..!!!

உங்கள் மொபைல் போனைக் காக்க சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்க

By Admin Staff → Friday, September 14, 2012


உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 ஸ்மார்ட்போனை அமெரிக்காவின்

ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கூப்பர்டீனோ நகரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆப்பிள் இன்கார்ப்பரேஷன்.

கணனிகள், மென்பொருள், வன்பொருள், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர், மீடியா பிளேயரான ஐபாட் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை 2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது.

முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐபோன் 3ஜி(2008), 3ஜிஎஸ்(2009), ஐபோன்4(2010), 4எஸ்(2011 அக்டோபர்) ஆகியவை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஐபோன் வரிசையில் 6வது தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் 5 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை வந்த மொடல்களைவிட இது நீளமானது, ஒல்லியானது, எடை குறைந்தது, பளபளப்பானது.

கருப்பு, சில்வர் என இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 4எஸ் மொடல் போலவே 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி மாடல்கள் முறையே ரூ.11 ஆயிரம், ரூ.16,500, ரூ.22 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் இந்த விலை.

ஸ்மார்ட்போனுக்கே உரித்தான டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, மீடியா பிளேயர், வீடியோ கமெரா, வை,பி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகள் இதிலும் உண்டு. 7.66 மி.மீ. தடிமன், 112 கிராம் எடை, இன்னும் அதிக தெளிவான ஸ்கிரீன் ஆகியவை சிறப்பு அம்சங்கள்.

லித்தியம் அயான் பாலிமர் பற்றரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 225 மணி நேரம் வரை பற்றரி சார்ஜ் நிற்கும். பேசினால் 8 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும். ஐபோன்5 வாங்குவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 21ஆம் திகதி விற்பனை தொடங்குகிறது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 வெளியானது

By Admin Staff →