பிரேசி்ல் நாட்டில் இரவுவிடுதியில் ஏற்பட்டதீ விபத்தில் 245-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் போர்டோ அல்ஜிரி மாகாணத்தின் மேற்கே சான்டா மேரியா பகுதியில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த ‌தீவிபத்தில் விடுதியில் இருந்த 200 பேர் தீயில் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50 பேர் தீக்காயம்அடைந்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். தற்போது 159 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.