செக் ரிபப்ளிக் நாட்டிலிருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்திற்கு 12 பயணிகளுடன் விமானம் ஒன்று வந்தது. அங்கு ஒடுதளத்தில் இறங்கியபோது, சறுக்கிய அந்த விமானம், அருகே இருந்த சாலைக்குள் பாய்ந்தது. அப்போது அந்த விமானம் பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்தது. இதில் விமானிகள் இருவர் உள்பட 4 பேர் பலியானர்கள். 8 பேர் காயமடைந்தனர்.


தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். பனிக்காரணமாக விபத்து நடந்திருக்கலாமா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.