Tags:

இறுதிப்போட்டிக்குத் நுழைந்தது இலங்கை அணி

By Battinews → Friday, October 5, 2012
20 -20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர் ஜெயவர்தனே 42 ரன்களும், தில்சன் 35 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அந்த அணி வீரர் அஜ்மல், அப்ரிடி, ஹபீஸ் மற்றும் குள் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Post Tags: