ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 2 இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையம், கோனார்க் தியேட்டர்  அருகே  அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தவிதமான வெடிபொருள் வெடித்தது என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை.

குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு காரணமாக தில்சுக் நகர் முழுவதும் பதற்றம் நிறைந்ததாக கருதப்படுகிறது. எனவே சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
.