கசகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கசகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு, புறப்பட்ட குறித்த விமானம், ஷிம்கெண்ட் எனும் நகரிற்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, மோசமான காலநிலையால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்தரத்திலேயே வெடித்த விமானம் சுமார் 800 மீற்றர் உயரத்திலிருந்து கீழே வீழ்ந்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தி பயணம் செய்த அனைவரும் உயிரிழ்ந்துள்ளனர். 7 விமான பணியாளர்களும், 20 இராணுவ அதிகாரிகளும் குறித்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.