உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி, அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் இடிந்து விழுந்துவிட்டது.





 சீனாவில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.இந்நிலையில் ஷாஞ்சியாகு பகுதியில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சீனப்பெருஞ்சுவர் இடிந்துவிழுந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Post Tags: